சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா இரட்டை வரி விதித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான வர்த்தக போர் வலுவடைந்து வரும் நிலையில் அமெரிக்கா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
சீனா மற்றும் அமெரிக்கா அகிய நாடுகள் அண்மைக்கலமாக இரு நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரிகளை அதிகரித்திருந்தது.
இதனால் சர்வதேச பொருளாதாரத்தில் பாதிப்புக்களும் சரிவுகளும் ஏற்பட்டிருந்தன.
இதையடுத்து இரு நாடுகளும் வரும் செப்டம்பர் மாதம் பேச்சுவார்த்தை நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் அமெரிக்காவின் பொருளாதாரத் தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில் தனது நாணய மதிப்பை சீனா குறைத்தது. இதையடுத்து சீனாவை நாணய மதிப்பைத் திரிக்கும் நாடு என அமெரிக்கா குற்றம் சாட்டியது.
இதனைத் தொடர்ந்து செப்டம்பர் மாதம் பேச்சுவார்த்தை நடப்பதற்கு வாய்ப்பில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளதுடன், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்கள் மீதன வரியை இரட்டிப்பாக்கியுள்ளது.