கொழும்பு நகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை வகை பிரித்துத் தருமாறு கொழும்பு மாநகர சபை, மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
அத்தோடு, எதிர்வரும் காலங்களில் பிரிக்கப்பட்ட குப்பைகள் மாத்திரமே மாநகர சபையினால் சேகரிக்கப்படும் என்றும் கொழும்பு மாநகர ஆணையாளர் பாலித்த நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக குப்பைகள் சேகரிக்கும் ஊழியர்களை அறிவுறுத்தியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கொழும்பு மாநகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை அருவக்காட்டுக்கு கொண்டுசெல்வது தொடர்பான கலந்துரையாடல் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக தற்போது எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளதாக கொழும்பு மாநகர ஆணையாளர் பாலித்த நாணயக்கார தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.