குடும்ப பிரச்சினை காரணமாக தவறான முடிவு எடுத்து 22 வயதுடைய இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நேற்று காலை 9.00 மணிக்கு சாவகச்சேரி நுணாவில் – வைரவர் கோவிலடிப் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றது.
மீசாலை மேற்கை சேர்ந்த 22 வயதுடைய மகாதேவன் சுபேதினி என்பவரே இவ்வாறு தற்கொலை செய்தவராவார்.
அண்மைக் காலமாக யாழில் அதிகரித்து வரும் குடும்பத் தகராறுகளும், தற்கொலைகளும், வன்முறைகளும் இளம் சமுதாயத்தினரை சீரழித்து வருகின்றன.
இதனாலேயே இவ்வாறான தற்கொலைகள் அடிக்கடி வடமாகாணங்களில் இடம்பெறுவதாக செய்திகளும் வெளிவருகின்றன.
இவ் இளம் பெண்ணின் தற்கொலை தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.