ஈராக் எல்லைக்குள் துருக்கி வான்படை நடத்திய விமானத்தாக்குதலில் குர்திஷ் கிளர்ச்சியாளர்கள் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈராக்கில் உள்ள குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி என்னும் அமைப்பை ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, மற்றும் துருக்கி உள்ளிட்ட நாடுகள் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளன.
பெரும்பாலும் ஈராக்கின் வடக்கு பகுதியில் ஆதிக்கம் செலுத்திவரும் குர்திஸ்தான் கிளர்ச்சியாளர்கள் கான்டில் மலைப்பகுதியிலும் தமது முகாம்களை அமைத்துள்ளனர்.
அங்கிருந்து துருக்கி எல்லையில் பயங்கரவாத தாக்குதல்களை அவ்வப்போது நடத்தி வருகின்ற நிலையில், இவர்களை ஒடுக்கும் பணியில் துருக்கியின் வான்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறான நிலையில், ஈராக்கின் ஹாரா மாகாணத்தில் குர்திஸ்தான் கிளர்சியாளர்களை குறிவைத்து துருக்கியின் விமானப்படைகள் வான்வெளி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் குர்திஸ் கிளர்சியாளர்கள் 7 பேர் உயிரிழந்ததாக துருக்கி ராணுவம் தெரிவித்துள்ளது.