Pearl One News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • உலகம்
    • இந்தியா
    • விளையாட்டு
    • சினிமா
  • திருகோணமலை
  • நாவல்
    • சரித்திர நாவல்
    • சிறுகதை
  • சமையல்
  • சுகமான வாழ்வு
  • இன்றைய ராசிபலன்
  • ENGLISH
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • உலகம்
    • இந்தியா
    • விளையாட்டு
    • சினிமா
  • திருகோணமலை
  • நாவல்
    • சரித்திர நாவல்
    • சிறுகதை
  • சமையல்
  • சுகமான வாழ்வு
  • இன்றைய ராசிபலன்
  • ENGLISH
No Result
View All Result
Pearl One News
No Result
View All Result
Home வரலாற்றுப் புதினம்

இலங்கை நாணயத்தின் வரலாறு – பொலநறுவை தொடக்கம் கோட்டை இராச்சியம் வரை

Anu by Anu
August 24, 2021
in வரலாற்றுப் புதினம்
3 min read
22
SHARES
224
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
இலங்கை நாணயத்தின் வரலாறு

பொலநறுவை இராசதானி (1017 – 1070)

பொலநறுவையிலிருந்து கோட்டே வரையான இராசதானி 1017 – 1070, 1070 – 1232 தம்பதெனியா 1232 – 1272, யாப்பகூவ 1272 – 1293, குருநாகல் 1293 – 1340, கம்பளை 1341 – 1374 மற்றும் கோட்டே (சீதாவாக்க 1521 – 1593) 1372 – 1597. கி.பி 1017 – 1070 காலத்தில் இலங்கையின் “வட பகுதியை” ஆட்சிபுரிந்த சோழ மன்னர்களும், அநுராதபுர இராசதானிக் காலகட்டத்தின் இறுதிப் பகுதியில் வெளியிடப்பட்ட “கஹவனுவுக்கு” சமமான கஹவனுவை வெளியிட்டுள்ளனர். ஆயினும் அது சொரசொரப்பான விளிம்புகளைக் கொண்டிருந்தது. தயாரிப்பின் பொருட்டு செப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்நாணயங்கள் இவற்றை வெளியிட்ட நேரம் ஆட்சியிலிருந்த மன்ன்னின் பெயரைக் கொண்டிருந்தமை இதில் காணப்பட்ட விசேட அடையாளமாகும். ஆட்சியாளரின் பெயருடன் நாட்டில் வெளியிடப்பட்ட முதலாவது நாணயம் இதுவாகும்.

பொலநறுவை தொடக்கம் கோட்டை இராச்சியம் வரை பயன்படுத்தப்பட்ட குத்திகள்

மேசா குத்திகள்

தம்பதெனிய இராச்சியக் குத்திகள்/ மத்திய கால நாணயங்கள்

சிங்க நாணயங்கள்

சேது நாணயங்கள்

நாணயங்களிலுள்ள அரசர்கள் பெயர்கள்:

இராசரட்டைநிசங்கமல்ல
இராசராசன்கொடகங்கா
ராஜேந்திரதேவன்லீலாவதி
விஜயபாகு Iசகாசமல்லா
பராக்கிரமபாகு Iதர்மஅசோகா

மோசா குத்திகள்

சோழர்களின் ஆதிக்கத்தை முறியடித்து நாட்டை ஒரு கொடியின் கீழ் கொண்டுவந்ததுடன் பொலனறுவை இராசதானியை ஆரம்பித்து வைத்த முதலாவது விஜயபாகு மன்னரும் ‘கஹவனுக்களை’ வெளியிட்டுள்ளார். அவர் நாணயங்களை தயாரிக்;கின்றபோது அவற்றின் மேல் தமது பெரையும் பொறித்தார். இதன்படி நாணயங்களில் தமது பெயரைப் பொறித்து அவற்றை வெளியிட்ட முதலாவது சிங்கள மன்னர் முதலாவது விஜயபாகு மன்னராவார். அந்த நாணயம் ‘மஸ்ஸ’ என அழைக்கப்பட்டது.

பொலனறுவைக் காலகட்டத்தின் ஆரம்பத்திலிருந்து தம்பதெனிய காலகட்டத்தின் இறுதி வரையிலும் மன்னரின் பெயரைப் பொறித்து நாணயங்களை வெளியிடுகின்ற இந்த நடைமுறை செயற்பட்டு வந்தது. பொலனறுவை இராசதானி காலப்பகுதிக்குரிய நாணயங்கள், அவற்றின் தயாரிப்புக்குப் பொறுப்பான மன்னரின் பெயர் ‘நாகரி’ எழுத்துக்களில் அல்லது ‘நாகரி’ உருக்களில் பொறிக்கப்பட்டுள்ளன. இதன்படி, விஜயபாகு மன்னனின் பெயர் ஸ்ரீ விஜயபாகு எனவும், பராக்கிரமபாகு மன்னின் பெயர் ஸ்ரீ பராக்கிரமபாகு எனவும், வோடகங்க என்பது ஸ்ரீ வோடகங்கதேவ எனவும், லீலாவதீ இராணி என்பது ஸ்ரீ ராஜ லீலாவதீ எனவும், சஹஸ்ஸமல்ல மன்னன் என்பது ஸ்ரீ சஹஸ்ஸமல்ல எனவும், தர்மாசோக என்பது ஸ்ரீ தர்மாசோகதேவ எனவும், புவனேகபாகு என்பது ஸ்ரீ புவனேகபாகு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயினும் நிஷங்கமல்ல மன்னரின் பெயர் ஸ்ரீ கலிகலகேஜ என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

விஜயபாகு மற்றும் பராக்கிரமபாகு மன்னர்களால் வெளியிடப்பட்ட நாணயங்களில் அவர்களது பெயர்களைப் பொறிக்கின்றபோது அவை எத்தனையாவது விஜயபாகு மன்னருடைய காலத்தில் அல்லது எத்தனையாவது பராக்கிரமபாகு மன்னருடைய காலத்தில் வெளியிடப்பட்டதென்பது குறிப்பிடப்படவில்லை. நாகரீ எழுத்துக்களில் பெயர் மாத்திரம் ஒரே விதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோன்று லீலாவதீ இராணியும் மூன்று காலகட்டங்களில் ஆட்சி புரிந்துள்ள போதிலும் அவரால் வெளியிடப்பட்ட நாணயங்களும் மேற்படி காலகட்டங்களில் எந்தக் காலத்தில் வெளியிடப்பட்டதென்பதை இனங்காண்பதற்கு முடியாதுள்ளது. 

பொலனறுவை இராசதானிக் காலத்தில் சோழ மன்னர்களின் முதலாவது ராஜராஜன் (கி.பி. 985 – 1016), முதலாவது ராஜேந்திரன் (கி.பி. 1012 – 1044) மற்றும் முதலாவது ராஜாதிராஜா (கி.பி. 1018 – 1054) ஆகியோரால் வெளியிடப்பட்ட நாணங்களும் பாண்டிய மன்னர்களால் வெளியிடப்பட்ட நாணயங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றிற்கு மேலதிகமாக, சீனாவின் சுங் வம்சத்தின் மன்னர்களது நாணயங்களும் அரேபிய நாணயங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளமை மூலம் அநுராதபுர இராசதானி காலகட்டத்தைப் போன்றே பொலனறுவை இராசதானி காலகட்டத்திலும் இலங்கை சர்வதேச வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தமை தெளிவாகின்றது.

pearl one news Early Massa Polonnaruwa மேசா குத்தி 1
மேசா குத்தி – 1

தம்பதெனிய குத்திகள்/ மத்திய கால நாணயங்கள்

அநுராதபுர இராசதானிக் காலகட்டத்தின் இறுதிக் காலத்தின் தயாரிப்பொன்றாகக் கருதப்படுகின்ற தங்க ‘கஹவனு’ பொலனறுவை காலகட்டத்தில் பிரவேசிக்கின்றபோது செப்பு நாணயமாக மாறியது. எவ்வாறாயினும், பொலனறுவை காலகட்டத்தின் ஆரம்பத்திலிருந்து தம்பதெனியா காலகட்டம் வரை பயன்படுத்தப்பட்ட நாணயங்கள் மத்திய கால நாணயங்களாக (தம்பதெனியா) அழைக்கப்படுகின்றன. ‘தம்பதெனிய மஸ்ஸ’ எனக் குறிப்பிடப்படுவது பொலனறுவை இராசதானி காலகட்டத்தில் வெளியிடப்பட்ட மஸ்ஸ நாணயத்தைப் போன்றதாகும். ‘சிங்கள மஸ்ஸ’ எனக் குறிப்பிடப்படுவதும் இதே நாணயமாகும்.

இந்த நாணயங்களில் உள்ளடங்கியுள்ள உருவப் படங்கள் அநேகமாக அநுராதபுர காலகட்டத்தில் வெளியிடப்பட்ட நாணயங்களில் உள்ளடங்கியுள்ள உருவங்களுக்கு பெரும்பாலும் ஒத்தவையாகக் காணப்படுகின்றன. நாணயத்தின் ஒரு பக்கத்தில் ‘தோதியைப்’ போன்றதொரு ஆடை அணிந்த மனிதன் வலதுபுறம் நோக்கியவாறு உள்ள விதத்தில் உருவமொன்று பொறிக்கப்பட்டுள்ளது. செப்பினால் தயாரிக்கப்பட்ட ‘மஸ்ஸ’ நாணயத்திலும் அதே உருவத்தைக் காணக்கூடியதாக உள்ளது. நாணயத்தின் மறுபக்கத்தில் அமர்ந்த நிலையிலுள்ள ஒரு உருவம் காணப்படுகின்றது. அதேபோன்று நாணயத்தின் இருபுறத்திலும் பல்வேறு விதத்திலான அடையாளங்களும் குறியீடுகளும் காணப்படுகின்றன.

pearl one news Lion coin of Parakramabahu சிங்கக் குத்திகள் பராக்கிரமபாகு IV
சிங்கக் குத்திகள் – பராக்கிரமபாகு IV

சிங்க நாணயங்கள்

பராக்கிரமபாகு மன்னரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நாணயத்தில் சிறப்பியல்பானதொரு தன்மையைக் காணக்கூடியதாக உள்ளது. அது அந்த நாணயத்தின் முகப்புப் பகுதியில் காணப்படுகின்ற நின்ற நிலையிலுள்ள மனித உருவத்திற்கு வலது பக்கத்தில் சிங்கத்தின் உருவமொன்று பொறிக்கப்பட்டுள்ளமையாகும். அந்த நாணயங்கள் “சிங்க நாணயங்கள்” என அழைக்கப்பட்டன. மன்னர்களின் பெயர்களைப் பொறித்து வெளியிடப்பட்ட நாணயங்களில் இறுதி நாணயமாக காணப்படுவது இதுவாகும்.

சேது நாணயம்

இந்த நாணயங்கள் 13ஆவது நூற்றாண்டளவில் யாழ்ப்பாணப் பிரதேசத்தில் ஆட்சிபுரிந்த ஆரியச்சக்கரவர்த்தி மன்னராலேயே வெளியிடப்பட்டுள்ளன. இது “தம்பதெனிய மஸ்ஸவைப்” பிரதிபண்ணியதொரு நாணயமாகும். நாணயத்தின் ஒரு பக்கத்தில் மாடொன்றின் உருவமும் மறுபக்கத்தில் “தம்பதெனிய மஸ்ஸ” நாணயத்தில் காணப்படுகின்ற நின்ற நிலையிலுள்ள மனிதனின் உருவத்தைப் போன்றதொரு உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது. நாணயம் செப்பினால் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த நாணயங்கள் அதிகமாக நல்லூர், திருநெல்வேலி, கோப்பாய், சண்டிலிப்பாய், சுந்தூர். நாகர்கோவில் மற்றும் மாங்குளம் ஆகிய பிரதேசங்களிலிருந்தே கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இலங்கை நாணயத்தின் வரலாறு தொடரும் ………

(நன்றி – இலங்கை மத்திய வங்கி)

Tags: tamil newsபொலநறுவை இராசதானி
Previous Post

அரச ஊழியர்களின் சம்பளத்திற்கு ஆப்பா? அரசாங்கம் விடுத்த அறிவிப்பு!

Next Post

அரபு இராஜியத்தில் இருந்து எரிபொருள் கடனை பெற இலங்கை தீவிர முயற்சி!

Next Post
அரபு இராஜியத்தில் இருந்து எரிபொருள் கடனை பெற இலங்கை தீவிர முயற்சி!

அரபு இராஜியத்தில் இருந்து எரிபொருள் கடனை பெற இலங்கை தீவிர முயற்சி!

மற்றுமொரு எம்.பிக்கு கோவிட்

மற்றுமொரு எம்.பிக்கு கோவிட்

பிரதமரின் மூன்று மகன்களும் துபாய் செல்கின்றனர்?
இலங்கை

பிரதமரின் மூன்று மகன்களும் துபாய் செல்கின்றனர்?

by Admin PearlOne
November 7, 2021
0

தற்போது கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வரும் பிரதமரின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷ துபாய் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பழைய செயின்ட் தாமஸ் கிரிக்கெட் அணியுடன் அவர் இந்தப்...

Read more
குளியாப்பிட்டி LOCKDOWN

நாட்டில் மீண்டும் பயணக் கட்டுப்பாடு? – சுகாதார பணிப்பாளர் வெளியிட்ட தகவல்

November 7, 2021
கர்தினாலுக்கு அரசாங்கம் மீது நம்பிக்கை இல்லையா? பீரிஸ் கூறும் தகவல்

மக்கள் வெளிநாட்டுக்கு செல்வது சிறந்த விடயம்..

November 7, 2021
  • சுகமான வாழ்வு
புதிய வகை கோவிட் தொற்று உங்களுக்கு ஏற்பட்டால் வீட்டிலேயே கண்டுபிடிப்பது எப்படி?
சுகமான வாழ்வு

புதிய வகை கோவிட் தொற்று உங்களுக்கு ஏற்பட்டால் வீட்டிலேயே கண்டுபிடிப்பது எப்படி?

by திருமலை தாசன்
April 27, 2021
0

இலங்கையில் தற்போது பரவும் கோவிட் மரபணுவின் விசேட அறிகுறியாக தொண்டை வலி மற்றும் ஏனைய அறிகுறிகள் ஏற்படுவதற்கும் முன்னர் நியுமோனியா ஏற்படுவதாக விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன...

Read more
சருமம், கேசம்… இதையெல்லாம் செய்யாதீங்க
சுகமான வாழ்வு

சருமம், கேசம்… இதையெல்லாம் செய்யாதீங்க

by Anu
December 26, 2020
0

சருமத்தை க்ளீன் ஆக்குறதா நினைச்சு, அடிக்கடி முகத்துக்கு ஸ்கிரப் பயன்படுத்தக் கூடாது. அது சருமத்தின் இயற்கையான எண்ணெய்ப்பசையை நீக்கிடும். மேலும், அது சருமத்துக்குக் கடுமையானதாவும் இருக்கும். முகத்தை...

Read more
  • சமையல்
பொட்டுக்கடலை முறுக்கு வீட்டிலேயே சுலபமாக செய்வது எப்படி?
சமையல்

பொட்டுக்கடலை முறுக்கு வீட்டிலேயே சுலபமாக செய்வது எப்படி?

by திருமலை தாசன்
July 25, 2020
0

முறுக்கு செய்ய வேண்டும் என்றால் அரிசியை கழுவி, உலர்த்தி, மாவு மில்லுக்கு சென்று, மாவு அரைத்து, அதன் பின்புதான் முறுக்கு செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும்  இல்லை....

Read more
பேக்கரி போகாமல் வீட்லயே கேக் பாப்ஸ் எப்படி செய்யலாம்?
சமையல்

பேக்கரி போகாமல் வீட்லயே கேக் பாப்ஸ் எப்படி செய்யலாம்?

by திருமலை தாசன்
August 25, 2020
0

கேக் பாப்ஸ் உங்க பார்ட்டி கொண்டாட்டங்களை சுவைப்படுத்தக் கூடியது. இதை செய்ய நீங்கள் நிறைய செலவழிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மீதமுள்ள கேக் துகள்களைக் கொண்டே...

Read more
  • சினிமா
மேதகு; தொடக்கம்தான், முடிவல்ல – துணிச்சலுடன் வெளிவந்த தமிழ் திரைப்படம்!
சினிமா

மேதகு; தொடக்கம்தான், முடிவல்ல – துணிச்சலுடன் வெளிவந்த தமிழ் திரைப்படம்!

by Anu
June 30, 2021
0

உலகத் தமிழர்களின் ஒருங்கிணைப்புடன் இதுவரை யாரும் கையில் எடுக்காத உன்னத முயற்சியாக மேதகு திரைப்படம் வெளிவந்துள்ளது. புத்தம் புதியவர்களால் தீர்க்கமாக எப்படி இதைச் சாதித்துக் காட்ட முடிந்தது...

Read more
ஜகமே தந்திரம் திரைவிமர்சனம்
சினிமா

ஜகமே தந்திரம் திரைவிமர்சனம்

by Anu
June 19, 2021
0

நடிகர்தனுஷ்நடிகைஐஸ்வர்யா லட்சுமிஇயக்குனர்கார்த்திக் சுப்பாராஜ்இசைசந்தோஷ் நாராயணன்ஓளிப்பதிவுஸ்ரேயாஸ் கிருஷ்ணா மதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை, கட்டப்பஞ்சாயத்து என சின்ன சின்ன...

Read more

Categories

  • English (3)
  • International (1)
  • Sports (2)
  • Sri Lanka (78)
  • Trincomalee (9)
  • Uncategorized (10)
  • அமானுஷ்யம் (8)
  • ஆன்மீகம் (102)
  • ஆரோக்கியம் (26)
  • இந்தியா (91)
  • இலங்கை (8,689)
  • உலகம் (263)
  • ஓகக்கலை (20)
  • சமையல் (9)
  • சரித்திர நாவல் (71)
  • சினிமா (98)
  • சிறுகதை (31)
  • சுகமான வாழ்வு (12)
  • ஜோதிடம் (291)
  • திருகோணமலை (451)
  • தொழில்நுட்பம் (7)
  • நீரிழிவு நோய் (3)
  • வணிகம் (32)
  • வரலாற்றுப் புதினம் (74)
  • விளையாட்டு (136)
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Contact us: editor@pearlonenews.com

© 2020 Pearl One News - Developed by WEBBRID.

No Result
View All Result
  • முகப்பு
  • சுகமான வாழ்வு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • திருகோணமலை
  • நாவல்
    • சரித்திர நாவல்
    • சிறுகதை
  • சமையல்
  • இன்றைய ராசிபலன்
  • ENGLISH

© 2020 Pearl One News - Developed by WEBBRID.