நீர்கொழும்பு, கட்டுவப்பிட்டிப் பிரதேசத்தில் அமைந்துள்ள புனித செபஸ்தியன் உருவச் சிலை கல்லெறிந்து சேதப்படுத்தப்பட்டதை அடுத்து அந்தப் பிரதேச மக்கள் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் குறித்த பிரதேசத்தில் பதற்றமான நிலமை ஏற்பட்டது.
அங்கு பொலிஸார் மற்றும் முப்படையினர் குவிக்கப்பட்டுப் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டது.
முஸ்லிம் வர்த்தக நிலையங்களைத் தற்காலிகமாக மூடுமாறும் அறிவுறுத்தப்பட்டது.
அங்கு விரைந்த பேராயர் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் கலந்துரையாடினர்.
அதன் பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அந்த இடத்திலிருந்து கலைந்து சென்றனர்.
