ஈஸ்டர் தாக்குதலை நடத்தியோர், அதற்கு உதவியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று நாடு முழுவதும் கறுப்பு ஞாயிறு அனுஷ்டிக்கப்படுகிறது.
கர்தினால் ரஞ்சித் ஆண்டகை இதற்கான அழைப்பை அண்மையில் வெளியிட்டார்.
இந்நிலையில் எதிர்வரும் ஈஸ்டர் தினத்திற்கு முன் நீதி கிடைக்காவிட்டால் இப்போராட்டம் நாடு முழுவதும் கறுப்பு போராட்டமாக வெடிக்கும் என்றும் கர்தினால் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.