Pearl One News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • உலகம்
    • இந்தியா
    • விளையாட்டு
    • சினிமா
  • திருகோணமலை
  • நாவல்
    • சரித்திர நாவல்
    • சிறுகதை
  • சமையல்
  • சுகமான வாழ்வு
  • இன்றைய ராசிபலன்
  • ENGLISH
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • உலகம்
    • இந்தியா
    • விளையாட்டு
    • சினிமா
  • திருகோணமலை
  • நாவல்
    • சரித்திர நாவல்
    • சிறுகதை
  • சமையல்
  • சுகமான வாழ்வு
  • இன்றைய ராசிபலன்
  • ENGLISH
No Result
View All Result
Pearl One News
No Result
View All Result
Home இலங்கை

அனைத்து பாடசாலைகளுக்கும் சமனான வசதிகள் – தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கை ஆயிரமாக அதிகரிக்கப்படும்.

Anu by Anu
September 11, 2020
in இலங்கை
1 min read
14
SHARES
137
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
ஜனாதிபதியின் புகைப்படங்களை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்த கூடாதென உத்தரவு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அனைத்து இராஜாங்க அமைச்சர்களுடன் நேற்று (10) ஜனாதிபதி அலுவலத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் மக்களுக்கும் சமூக மேம்பாட்டிற்கும் காரணமாக அமையக்கூடிய பல தீர்மானங்களை எடுத்தார்.

நாட்டில் மொத்த தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை 1000 ஆக அதிகரிப்பது அதில் ஒன்றாகும். தற்போதுள்ள சில தேசிய பாடசாலைகள் பெயரளவிலேயே காணப்படுகின்றது. தேவையான வசதிகள் எதுவும் அவற்றில் இல்லை. அவ்வாறான பாடசாலைகளும் உடனடியாக அபிவிருத்தி செய்யப்படும்.

பாடசாலை கட்டமைப்பின் முன்னேற்றத்திற்காக மாவட்ட கல்வி குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி உள்ளிட்ட இராஜாங்க அமைச்சர்கள் தீர்மானம் ஒன்றை மேற்கொண்டனர். வலயக் கல்வி காரியாலயங்கள் மற்றும் கோட்டக் கல்வி காரியலயங்களுக்கிடையில் தொடர்பை பலப்படுத்துவதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டது. ஆசிரியர் இடமாற்றம் மற்றும் மாணவர்களை பாடசாலைகளுக்கு உள்வாங்குதல் தவிர்ந்த பாடசாலை கட்டமைப்பின் முன்னேற்றத்திற்கு காரணமாக அமையக்கூடிய அனைத்து செயற்பாடுகளுக்கும் பங்களிக்கக்கூடிய சந்தர்ப்பம் அரசியல்வாதிகளுக்கு உள்ளது. அது பொது நலனை நோக்கமாகக்கொண்டதே தவிர அரசியல் தலையீடு அல்ல எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

நாட்டில் பாடசாலைகளில் உள்ள அதிபர் பற்றாக்குறையை நிரப்புவதற்காக பதில் அதிபர்களை நியமிப்பது தொடர்பாகவும் இன்றைய கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது. ஆசிரியர் யாப்புக்கமைய ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் பரீட்சைகளை நடாத்த வேண்டும். அதிபர்களின் பற்றாக்குறைக்கு பிரதான காரணமாக அது முறையாக இடம்பெறாமையை குறிப்பிடலாம். பாடசாலைகளில் இருக்கின்ற திறமையான மற்றும் அனுபவம் கொண்ட ஆசிரியர்களை பதில் அதிபர்களாக நியமிப்பதற்கு உள்ள வாய்ப்புக்களை கண்டறிவதற்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

மழை காலங்களில் நகரங்கள் நீரினால் நிரம்பும் பிரச்சினை தொடர்பாகவும் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. அதுபற்றி தனது கருத்தை தெரிவித்த ஜனாதிபதிஇ ‘சிறு மழைக்கும் கொழும்பு நீரினால் நிரம்புகின்றது. நாம் அதற்கு நிலையான தீர்வொன்றை அறிமுகப்படுத்தினோம். கடந்த ஐந்து வருடங்களில் அது செயற்படுத்தப்படவில்லை. பிரச்சினை தற்போது மீண்டும் ஏற்பட்டுள்ளது. பொறுப்புக்கள் பல்வேறு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருப்பதும் தீர்வு வெற்றியடையாமைக்கு காரணமாகும்’ என்று கூறிய ஜனாதிபதி அவ்வாறான பலவீனங்களை களைந்து பிரச்சினைகளை உடனடியாக தீர்ப்பதன் அவசியம் குறித்தும் தெளிவுபடுத்தினார்.

ஔடத துறை பற்றி கவனத்தை செலுத்திய ஜனாதிபதிஇ மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் ஔடத சட்டத்தை மறுசீரமைப்பது பற்றியும் கலந்துரையாடினர். மருந்து இறக்குமதியை முறைமை படுத்துவதற்கும் அதற்காக கைச்சாத்திட்டுள்ள ஒப்பந்தங்களை மீளாய்வு செய்வதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டது. ‘எமது நாட்டில் தேவைக்கு மாத்திரமன்றி வெளிநாட்டு சந்தையை இலக்காகக் கொண்டும் மருந்து உற்பத்தியை மேற்கொள்ள எமக்கு முடியும். அதற்காக முதலீட்டாளர்களும் தயாராக உள்ளனர். இந்த இலக்கை அடைந்துகொள்வது நாடு அடையும் பாரிய வெற்றியாக வரலாற்றில் பதியப்படும்’ என்று பொருளாதார புத்தெழுச்சி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

போதைப்பொருளை ஒழிப்பதற்காக சிவல் பாதுகாப்பு குழுவொன்றை ஸ்தாபித்து போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டங்களை மிகவும் செயற்திறனாக முன்னெடுப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

அரச சேவையின் செயற்திறனை அதிகரித்து அபிவிருத்தி செயற்பாட்டுக்காக தொடர்ச்சியான பங்களிப்பை பெற்றுக்கொள்வதன் அவசியம் பற்றியும் ஜனாதிபதி அவர்கள் தெளிவுபடுத்தினார். ஒரு சில அதிகாரிகள் தீர்மானங்களை எடுப்பதற்கு பயப்படுகின்றனர். இந்நிலையை மாற்ற வேண்டும். அரச சேவையை செயற்திறன்மிக்கதாகவும் முறைமைப்படுத்துவதற்கும் அரசியல்வாதிகள்இ அரச அதிகாரிகள் இணக்கப்பாட்டுடன் செயற்படுவதன் அவசியத்தையும் ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.

ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தரவும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டார்.

Previous Post

கைதான மாகந்துரே மதூஷின் சகா

Next Post

13. மீன் இருக்கை (மச்சாசனம்)

Next Post
13. மீன் இருக்கை (மச்சாசனம்)

13. மீன் இருக்கை (மச்சாசனம்)

மட்டக்களப்பில் சிறு கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு கடன் வசதி

மட்டக்களப்பில் சிறு கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு கடன் வசதி

பிரதமரின் மூன்று மகன்களும் துபாய் செல்கின்றனர்?
இலங்கை

பிரதமரின் மூன்று மகன்களும் துபாய் செல்கின்றனர்?

by Admin PearlOne
November 7, 2021
0

தற்போது கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வரும் பிரதமரின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷ துபாய் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பழைய செயின்ட் தாமஸ் கிரிக்கெட் அணியுடன் அவர் இந்தப்...

Read more
குளியாப்பிட்டி LOCKDOWN

நாட்டில் மீண்டும் பயணக் கட்டுப்பாடு? – சுகாதார பணிப்பாளர் வெளியிட்ட தகவல்

November 7, 2021
கர்தினாலுக்கு அரசாங்கம் மீது நம்பிக்கை இல்லையா? பீரிஸ் கூறும் தகவல்

மக்கள் வெளிநாட்டுக்கு செல்வது சிறந்த விடயம்..

November 7, 2021
  • சுகமான வாழ்வு
புதிய வகை கோவிட் தொற்று உங்களுக்கு ஏற்பட்டால் வீட்டிலேயே கண்டுபிடிப்பது எப்படி?
சுகமான வாழ்வு

புதிய வகை கோவிட் தொற்று உங்களுக்கு ஏற்பட்டால் வீட்டிலேயே கண்டுபிடிப்பது எப்படி?

by திருமலை தாசன்
April 27, 2021
0

இலங்கையில் தற்போது பரவும் கோவிட் மரபணுவின் விசேட அறிகுறியாக தொண்டை வலி மற்றும் ஏனைய அறிகுறிகள் ஏற்படுவதற்கும் முன்னர் நியுமோனியா ஏற்படுவதாக விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன...

Read more
சருமம், கேசம்… இதையெல்லாம் செய்யாதீங்க
சுகமான வாழ்வு

சருமம், கேசம்… இதையெல்லாம் செய்யாதீங்க

by Anu
December 26, 2020
0

சருமத்தை க்ளீன் ஆக்குறதா நினைச்சு, அடிக்கடி முகத்துக்கு ஸ்கிரப் பயன்படுத்தக் கூடாது. அது சருமத்தின் இயற்கையான எண்ணெய்ப்பசையை நீக்கிடும். மேலும், அது சருமத்துக்குக் கடுமையானதாவும் இருக்கும். முகத்தை...

Read more
  • சமையல்
பொட்டுக்கடலை முறுக்கு வீட்டிலேயே சுலபமாக செய்வது எப்படி?
சமையல்

பொட்டுக்கடலை முறுக்கு வீட்டிலேயே சுலபமாக செய்வது எப்படி?

by திருமலை தாசன்
July 25, 2020
0

முறுக்கு செய்ய வேண்டும் என்றால் அரிசியை கழுவி, உலர்த்தி, மாவு மில்லுக்கு சென்று, மாவு அரைத்து, அதன் பின்புதான் முறுக்கு செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும்  இல்லை....

Read more
பேக்கரி போகாமல் வீட்லயே கேக் பாப்ஸ் எப்படி செய்யலாம்?
சமையல்

பேக்கரி போகாமல் வீட்லயே கேக் பாப்ஸ் எப்படி செய்யலாம்?

by திருமலை தாசன்
August 25, 2020
0

கேக் பாப்ஸ் உங்க பார்ட்டி கொண்டாட்டங்களை சுவைப்படுத்தக் கூடியது. இதை செய்ய நீங்கள் நிறைய செலவழிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மீதமுள்ள கேக் துகள்களைக் கொண்டே...

Read more
  • சினிமா
மேதகு; தொடக்கம்தான், முடிவல்ல – துணிச்சலுடன் வெளிவந்த தமிழ் திரைப்படம்!
சினிமா

மேதகு; தொடக்கம்தான், முடிவல்ல – துணிச்சலுடன் வெளிவந்த தமிழ் திரைப்படம்!

by Anu
June 30, 2021
0

உலகத் தமிழர்களின் ஒருங்கிணைப்புடன் இதுவரை யாரும் கையில் எடுக்காத உன்னத முயற்சியாக மேதகு திரைப்படம் வெளிவந்துள்ளது. புத்தம் புதியவர்களால் தீர்க்கமாக எப்படி இதைச் சாதித்துக் காட்ட முடிந்தது...

Read more
ஜகமே தந்திரம் திரைவிமர்சனம்
சினிமா

ஜகமே தந்திரம் திரைவிமர்சனம்

by Anu
June 19, 2021
0

நடிகர்தனுஷ்நடிகைஐஸ்வர்யா லட்சுமிஇயக்குனர்கார்த்திக் சுப்பாராஜ்இசைசந்தோஷ் நாராயணன்ஓளிப்பதிவுஸ்ரேயாஸ் கிருஷ்ணா மதுரையில் பரோட்டா கடையில் வேலை பார்த்து வருகிறார் நடிகர் தனுஷ். இவர் ஊரில் கொலை, கட்டப்பஞ்சாயத்து என சின்ன சின்ன...

Read more

Categories

  • English (3)
  • International (1)
  • Sports (2)
  • Sri Lanka (78)
  • Trincomalee (9)
  • Uncategorized (10)
  • அமானுஷ்யம் (8)
  • ஆன்மீகம் (102)
  • ஆரோக்கியம் (26)
  • இந்தியா (91)
  • இலங்கை (8,689)
  • உலகம் (263)
  • ஓகக்கலை (20)
  • சமையல் (9)
  • சரித்திர நாவல் (71)
  • சினிமா (98)
  • சிறுகதை (31)
  • சுகமான வாழ்வு (12)
  • ஜோதிடம் (291)
  • திருகோணமலை (451)
  • தொழில்நுட்பம் (7)
  • நீரிழிவு நோய் (3)
  • வணிகம் (32)
  • வரலாற்றுப் புதினம் (74)
  • விளையாட்டு (136)
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Contact us: editor@pearlonenews.com

© 2020 Pearl One News - Developed by WEBBRID.

No Result
View All Result
  • முகப்பு
  • சுகமான வாழ்வு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
    • சினிமா
  • திருகோணமலை
  • நாவல்
    • சரித்திர நாவல்
    • சிறுகதை
  • சமையல்
  • இன்றைய ராசிபலன்
  • ENGLISH

© 2020 Pearl One News - Developed by WEBBRID.